புதன், 21 நவம்பர், 2012

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?

சமீபத்தில் நடந்த தர்மபுரி சம்பவம், ரொம்ப நாள் அமுங்கி கிடந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது.  அதுதான் ஜாதி விட்டு ஜாதி காதல் பிரச்சினை.  வன்னியர் சமூகம், தன் சமூகப் பெண்ணை அருந்ததியர் சமூக ஆண் கவர்ந்து சென்றதை, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

இது வெறும் கலப்பு மணம் அல்ல.  திட்டமிட்டு இளம் பெண்களை திருமாவளவன் கட்சி இளைஞர்கள் கவர்ந்து செல்லும் ஒரு களவு என்கிறார் பா.ம.க தலைவர் ராமதாசும், காடுவெட்டி குருவும்.  இதைப் பற்றி பி.பி.சி வானொலிக்கு அவர்கள் அளித்த பேட்டியில்  விரிவாக கூறியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூட பெண்ணை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதத்தில் திருப்பி அனுப்பினால், அப்பெண்ணின் அண்ணனோ தந்தையோ என்ன செய்வார் என்று கேள்வி எழுப்புகிறார்.  நியாயமான கேள்வி!   கடலூரில் மட்டும் 2000 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.

இதற்கு முன்பு, கொங்கு மண்டலத்தில், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், சாதி மறுப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தை நடத்தியது, தமிழ்நாட்டில் பலரை திரும்பி பார்க்க வைத்திருந்தது.  இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், விவசாய சமூகமான கொங்கு வெள்ளாளரின் சொத்தை குறி வைத்தே அந்த சமூகத்தின் இளம்பெண்களை மயக்கி திருமணம் செய்கிறார்கள் என்கிறார்.